sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விடுபட்ட வடிகால்வாய் பணி ஓ.எம்.ஆரில் மீண்டும் துவக்கம்

/

விடுபட்ட வடிகால்வாய் பணி ஓ.எம்.ஆரில் மீண்டும் துவக்கம்

விடுபட்ட வடிகால்வாய் பணி ஓ.எம்.ஆரில் மீண்டும் துவக்கம்

விடுபட்ட வடிகால்வாய் பணி ஓ.எம்.ஆரில் மீண்டும் துவக்கம்


ADDED : ஜூலை 27, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஓ.எம்.ஆர்., சாலை ஓரம் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன.

எனினும், சில இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் விடுபட்டுள்ளன.

அந்த வகையில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, ஏரிக்கரை சாலை இணையும் இடத்தில், மழைநீர் வடிகால்வாய் இணைக்காமல் விடப்பட்டிருந்தது.

இதனால், ஏற்கனவே அமைத்த கால்வாயில் கழிவுநீர் குளம் போல தேங்கியது.

கால்வாயில் குளம்ேgபோல் தேங்கிய கழிவுநீர், நாளுக்கு நாள் அதிகரித்து, கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், அந்த வழியாக செல்லும் மக்கள், அதிலேயே நடந்து செல்வதுடன், துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் பணியை துவக்கியுள்ளனர்.

பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் எடுக்கப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us