sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்

/

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்


ADDED : மே 14, 2024 09:55 PM

Google News

ADDED : மே 14, 2024 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 21 வார்டுகள் உடையது. இங்கு, 20,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு சேகரிக்கப்படும் குப்பை, அடிகளார் சாலை, மட்டன ஓடை, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

நகராட்சி முழுதும் குப்பையை அள்ள, தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்து, ஒப்பந்த முறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஜி.எஸ்.டி., சாலை அருகில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

பல நாட்களாக பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us