sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இரவில் அரை நிர்வாணமாக சுற்றிய மர்ம நபரால் அச்சம்

/

இரவில் அரை நிர்வாணமாக சுற்றிய மர்ம நபரால் அச்சம்

இரவில் அரை நிர்வாணமாக சுற்றிய மர்ம நபரால் அச்சம்

இரவில் அரை நிர்வாணமாக சுற்றிய மர்ம நபரால் அச்சம்


ADDED : ஜூன் 17, 2024 03:24 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில், தென் மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், வாடகைக்கு தங்கி, மகேந்திரா சிட்டி, ஒரகடம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில், இரவு நேரங்களில், மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து, அரை நிர்வாணமாக கையில் கிரிக்கெட் பேட்டுடன் வீடுகளை சுற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் சுற்றித் திரிந்த அந்த நபரைக் கண்ட குடியிருப்புவாசிகள், பிடிக்க முயன்று, அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசாரைக் கண்ட அந்த நபர், அருகில் இருந்த சீமைக்கருவேல மர புதரில் சென்று தப்பினார். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த மர்ம நபரால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us