/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஸ் கசிவால் விபத்து ஆறு பேருக்கு தீக்காயம்
/
காஸ் கசிவால் விபத்து ஆறு பேருக்கு தீக்காயம்
ADDED : மார் 05, 2025 11:42 PM
கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம், காந்தி நகர், 15வது தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி, 75. மனைவி ராணி, 70, மகள் சாந்தி, 45, மருமகன் ரகு, 48, பேரன் அஜித்குமார், 27, ஆகியோர், நேற்று முன்தினம் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.
சிலிண்டரை முறையாக அணைக்காததால், வீடு முழுதும் காஸ் கசிந்துள்ளது. நேற்று காலை ராணி எழுந்து, மின் விளக்கு ஸ்விட்சை போட்டுள்ளார்.
அப்போது, காஸ் கசிவால் மின் உபகரணங்கள் வெடித்து, வீடு முழுதும் தீப்பற்றியது. இதில் முனுசாமி, ராணி, சாந்தி, ரகு, அஜித்குமார் ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டனர்; தகவலறிந்து வந்த போலீசார், ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர்.
அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேடவாக்கம் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காற்றோட்டம் இல்லாததால் காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தெரிந்தது.
விபத்து நடந்த வீட்டில் ரெகுலேட்டர், எரிந்த பாத்திரம் மற்றும் கண்ணாடி துண்டுகளை, தடயவியல் நிபுணர்கள் சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
அதேபோல், வியாசர்பாடி, எஸ்.எம்., நகரில் கந்தம்மாள், 80, என்பவர், வீட்டில் தனியாக வசிக்கிறார்.
நேற்று அதிகாலை, வீட்டில் காஸ் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டு, படுக்கையில் இருந்த கந்தம்மாளுக்கு 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.