/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் தாலுகாவில் வரும் 28ல் சிறப்பு முகாம்
/
வண்டலுார் தாலுகாவில் வரும் 28ல் சிறப்பு முகாம்
ADDED : ஆக 21, 2024 09:24 PM
செங்கல்பட்டு:வண்டலுார் தாலுகாவில், உங்களை தேடி; உங்கள் ஊரில் சிறப்பு முகாம், வரும் 28ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி; உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயலாக்கும் நோக்கில், வரும் 28ம் தேதி, கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், வண்டலுார் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாயவிலைக் கடைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன்பின், வண்டலுார் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கலெக்டரை சந்தித்து, பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.