/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு
/
எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு
ADDED : செப் 08, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய மானாமதி காவல் நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தவர் ராமானுஜம், 59. இவர், நேற்று முன்தினம் குடும்ப உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தாம்பரம் சென்றிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அருகே இருந்தவர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.