/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பாட புத்தகம் வினியோகம் துவக்கம்
/
செங்கையில் பாட புத்தகம் வினியோகம் துவக்கம்
ADDED : மே 28, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 84,264 மாணவர்களுக்கு, 5 லட்சத்து 31 ஆயிரத்து 231 பாடப் புத்தகங்களும், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில், 27,820 மாணவர்களுக்கு, 1 லட்சத்து 53 ஆயிரத்து 786 பாடப் புத்தகங்கள் வழங்க அரசு உத்தரவிட்டது.
அவற்றிற்கு, சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்தும், மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்தும், கடந்த 24ம் தேதியில் இருந்து, லாரிகள் வாயிலாக புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.