/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ளச்சாராயம் குடித்தோருக்கு சோதனை மருத்துவ துறையினர் ஏற்க உத்தரவு
/
கள்ளச்சாராயம் குடித்தோருக்கு சோதனை மருத்துவ துறையினர் ஏற்க உத்தரவு
கள்ளச்சாராயம் குடித்தோருக்கு சோதனை மருத்துவ துறையினர் ஏற்க உத்தரவு
கள்ளச்சாராயம் குடித்தோருக்கு சோதனை மருத்துவ துறையினர் ஏற்க உத்தரவு
ADDED : ஜூலை 24, 2024 12:35 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், எஸ்.பி., சாய் பிரணீத், கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், எஸ்.பி., சாய் பிரணீத் பேசியதாவது:
கள்ளச்சாராயம் குடித்தவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களை பரிசோதனை செய்து அறிக்கை பெற, சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோரை பிடிக்கும் பணியோடு, இது போல ரத்த பரிசோதனை அறிக்கை பெறவும் போலீசார் அலைய வேண்டியுள்ளது. இதனால், போலீசாருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.
அதனால், சாராயம் குடித்தவர்களின் ரத்த பரிசோதனை செய்யும் பணியை, செங்கல்பட்டு மருத்துவ குழுவினரே மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியிலும், குற்றவாளிகளை பிடிக்கும் பணியிலும், போலீசார் முழுமையாக ஈடுபட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான விபரங்களை, உடனுக்குடம் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய்த் துறையினர் அளிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களை பரிசோதனை செய்யும் பணியை, முழுமையாக மருத்துவத் துறையினரே ஏற்க வேண்டும். பரிசோதனை செய்வதற்கான கருவிகள் குறித்து, மருத்துவத் துறையினர் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.