sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

/

பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 15, 2024 05:47 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே பெரும்பாக்கம் ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓடு போட்ட கட்டடத்தில் வகுப்பறை இயங்கி வந்தது. இந்நிலையில் கட்டடம் பழுதடைந்ததால், மாணவர்களின் நலன் கருதி, புதிதாக பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.

தற்போது, புதிய கட்டடத்தில் பள்ளி செயல்படுகிறது. பழைய கட்டடத்தில் பழுதடைந்த பொருட்கள், மேஜை, சேர் போன்றவை வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கட்டடம் இடிந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us