sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை ஓரம் மணல் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

சாலை ஓரம் மணல் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலை ஓரம் மணல் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலை ஓரம் மணல் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : ஏப் 25, 2024 12:38 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையை திருக்கச்சூர், கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு சென்று வரும் வாகனங்கள், இந்த சாலையில் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.

கொளத்துார் உள்ளிட்ட கல் அரவை நிலையங்களுக்கு செல்லும், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன.

இதன் காரணமாக, சாலையில் தெள்ளிமேடு, கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மணல் திட்டுக்கள் குவிந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது.

வாகன ஓட்டிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் குவிந்த மணல் திட்டுக்களை தொழிலாளர்கள் ஒன்று சேர்த்தனர்.

ஒன்றாக சேர்ந்த மணல் குவியல்களை அப்புறப்படுத்தாமல், சாலை மையத் தடுப்பில் குவியல்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், காற்று அடிக்கும் போது மணல் துகள்கள் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும், சாலையில் உள்ள காய்ந்த சருகுகளும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.

எனவே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us