/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டும் குழியுமான சாலையால் பள்ளம்: பாக்கம்வாசிகள் அவதி
/
குண்டும் குழியுமான சாலையால் பள்ளம்: பாக்கம்வாசிகள் அவதி
குண்டும் குழியுமான சாலையால் பள்ளம்: பாக்கம்வாசிகள் அவதி
குண்டும் குழியுமான சாலையால் பள்ளம்: பாக்கம்வாசிகள் அவதி
ADDED : மே 26, 2024 04:41 PM

கடப்பாக்கம்:கடப்பாக்கம் அருகே பள்ளம்பாக்கம் கிராமத்தில் இருந்து, கொளத்துார் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது. இச்சாலையை தேன்பாக்கம், வெண்ணாங்குப்பட்டு, கொளத்துார் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் என, தினசரி ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளம்பாக்கம்- - கொளத்துார் கிராமத்திற்கு இடையே உள்ள சாலை, கடந்த 15 ஆண்டுகளாக, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை முழுதும் சேதமடைந்து உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

