sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சீரமைத்த நான்கே மாதங்களில் பல்லிளித்த செய்யூர் தார் சாலை

/

சீரமைத்த நான்கே மாதங்களில் பல்லிளித்த செய்யூர் தார் சாலை

சீரமைத்த நான்கே மாதங்களில் பல்லிளித்த செய்யூர் தார் சாலை

சீரமைத்த நான்கே மாதங்களில் பல்லிளித்த செய்யூர் தார் சாலை

2


ADDED : செப் 17, 2024 12:24 AM

Google News

ADDED : செப் 17, 2024 12:24 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : செய்யூர் அருகே தையலங்காடு கிராமத்தில், வில்லிப்பாக்கம் - செய்யூர் செல்லும் தார்சாலை உள்ளது.

இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஒத்திவிளாகம் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு, கடப்பாக்கம், மரக்காணம் பகுதியில் கொட்டப்பட்டது.

ஏரியில் இருந்து லாரிகள் வாயிலாக, அதிக அளவில் மண் எடுத்துச் செல்லப்பட்டதால், சாலையின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தன.

பின், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் நிறுவனம் சார்பாக, கடந்த மே மாதம் சாலை சீரமைக்கப்பட்டது. சாலையை சீரமைத்து நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், சீரமைக்கப்பட்ட இடங்களில், சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது.

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us