sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சொத்து தராததால் ஆத்திரம் பெரியப்பாவை கொன்ற மகன்

/

சொத்து தராததால் ஆத்திரம் பெரியப்பாவை கொன்ற மகன்

சொத்து தராததால் ஆத்திரம் பெரியப்பாவை கொன்ற மகன்

சொத்து தராததால் ஆத்திரம் பெரியப்பாவை கொன்ற மகன்


ADDED : ஜூன் 15, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார், துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, தர்காஸ் பகுதியில் வசித்தவர் உத்திராடம், 56; நங்கநல்லுார் பகுதி மின் வாரிய அலுவலக கேங்மேன்.

இவருக்கும், இவரது தம்பி சங்கர் என்பவருக்கும், குடும்ப சொத்துக்களை பாகம் பிரிப்பதில், நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை, தர்காஸ் பகுதியில் உள்ள ஏரிக்கு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக, உத்திராடம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த அவரது தம்பி சங்கரின் மகன் சுபாஷ், 22, பெரியப்பாவான உத்திராடத்தை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி படுகொலை செய்து, அங்கிருந்து தப்பினார்.

இதைக்கண்ட அப்பகுதிவாசிகள், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உத்திராடத்தின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவான சுபாஷை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us