/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூக்கில் ரத்தம் வடிந்து காரில் இறந்த வாலிபர்
/
மூக்கில் ரத்தம் வடிந்து காரில் இறந்த வாலிபர்
ADDED : ஏப் 23, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை : குன்றத்துார் அருகே படப்பை, காட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 34; மீன் வியாபாரம் செய்து வந்தார்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின்,'டாடா ஜெஸ்ட்' காரில், நேற்று முன்தினம் இரவு துாங்கியுள்ளார்.
நேற்று காலை, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வெங்கடேசன் இறந்து கிடந்தார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடி போதையால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வெங்கடேசன் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

