ADDED : மார் 26, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:படப்பை அடுத்த வெள்ளேரிதாங்கல் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று பணியில் இருந்த வினோத்குமார், 21, என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், தொழிற்சாலை நிர்வாகத்தினர் குரேம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உறவினர்கள் புகார் அளித்ததையடுத்து, மணிமங்கலம் போலீசார்விசாரிக்கின்றனர்.

