sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜூன் 4 வரை கட்டுப்பாடு நீடிப்பு மாமல்லை வியாபாரிகள் புலம்பல்

/

ஜூன் 4 வரை கட்டுப்பாடு நீடிப்பு மாமல்லை வியாபாரிகள் புலம்பல்

ஜூன் 4 வரை கட்டுப்பாடு நீடிப்பு மாமல்லை வியாபாரிகள் புலம்பல்

ஜூன் 4 வரை கட்டுப்பாடு நீடிப்பு மாமல்லை வியாபாரிகள் புலம்பல்


ADDED : ஏப் 11, 2024 11:42 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, கடந்த மாதம் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ளன.

அதன்படி, 50,000 ரூபாய் வரை மட்டுமே ஒருவர் கொண்டு செல்ல வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா, வாக்காளர்களுக்கு அளிக்க பரிசு பொருட்கள், சட்டவிரோத மது கடத்தப்படுகிறதா என, தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், நிலையான கண்காணிப்பு,பறக்கும் படை குழுவினர்,முக்கிய சாலைகளில் வாகன சோதனைநடத்துகின்றனர்.

மாமல்லபுரத்தில், சொகுசு கடற்கரை விடுதிகள், உணவக ரெஸ்டா ரெண்டுகள், கைவினை பொருள் விற்பனைகடைகள், சிற்பக்கூடங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.

தேர்தல் கட்டுப்பாடால், இத்தகைய தொழில் தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, திருக்கழுக்குன்றம், செய்யூர் தாலுகா பகுதிகளிலிருந்து, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, தர்பூசணி கொண்டு செல்லும், மொத்த வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

இச்சூழலில், தேர்தலுக்குப் பிறகும், ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என, தேர்தல் ஆணையம்அறிவித்துள்ள நிலையில்,இப்பகுதி தொழில் தரப்பினர் அதிருப்தியில்உள்ளனர்.

இதுகுறித்து மாமல்லை வியாபாரிகள் கூறியதாவது:

சுற்றுலா பயணியர் அனைவருமே, இங்கு 'ஆன்லைன்' பரிவர்த்தனை செய்வதில்லை. பலர் பணமாகக் கொடுக்கின்றனர். இங்கு செலவிட அதிக பணம் கொண்டு வருவர்.

தேர்தல் கட்டுப்பாடு களால், சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், தொழில்கள் பாதிக்கப்படுகிறது. தேர்தல் வரை தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.

தற்போது, ஜூன்வரை தேர்தல் கட்டுப்பாட்டை நீட்டித்துள்ளனர். இதனால், மாமல்ல புரத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us