sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தொழிலாளர் நலவாரிய விடுதி புதுப்பிப்பு புதிதாக அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு

/

தொழிலாளர் நலவாரிய விடுதி புதுப்பிப்பு புதிதாக அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு

தொழிலாளர் நலவாரிய விடுதி புதுப்பிப்பு புதிதாக அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு

தொழிலாளர் நலவாரிய விடுதி புதுப்பிப்பு புதிதாக அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 12, 2024 11:04 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

இதையடுத்து, பயணியர் தங்குவதற்கு வசதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை விடுதி மற்றும் தொழிலாளர் நல வாரியத்தின் ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் ஆகியவை, அரசு சார்பில் அமைக்கப்பட்டன.

சுற்றுலா வரும் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற பயணியர், குறைந்த கட்டணத்தில் தங்ககுவதற்காக, புறவழி சந்திப்பு அருகில்,கடந்த 1988 முதல் ஜவஹர் லால் நேரு ஓய்வு இல்லம் இயங்கி வருகிறது.

தரைதளம், மேல்தளம் ஆகியவற்றில், தலா ஐந்து அறைகள், மேல்தளத்தில் கருத்தரங்க கூடம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது. துவக்கத்தில் விடுதி மட்டுமே இயங்கியது.

இந்நிலையில், வளாகத்தின் பெரும்பரப்பு திறந்தவெளி காலியாக இருந்த நிலையில், வாரியத்தின் வருவாய் கருதி, பிரபல தனியார் இனிப்பகம்மற்றும் உணவகத்திற்கு குத்தகைக்கு அளித்து, 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இச்சூழலில், விடுதி போதிய பராமரிப்பின்றி சீரழிந்து, சில ஆண்டு களாக பயனின்றி இருந்தது. மேலும், 'குடி'மகன்களின் மதுக்கூடமாகமாறியது.

இந்த விடுதி, நகரின் பிரதான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பயணியர் அதிகரித்துவருகின்றனர்.

35 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வாரியம் முன்வர வேண்டும்.

ஆனால், வாரிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பழைய கட்டடத்தின் சுவர் மற்றும் மேற்கூரை கான்கிரீட் பூச்சு பெயர்ந்துள்ளதை சீரமைத்துள்ளது.

மேலும், சாதாரண தரையில் டைல்ஸ் பதித்துள்ளது. கதவு மற்றும் ஜன்னல்களை புதிதாக மாற்றியுள்ளது. மின் இணைப்பும் புதுப்பிக்கப்பட்டு, வளாகத்திற்குசுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us