/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'நம்பர் பிளேட்' இல்லாத லாரிகள் சித்தாமூர் பகுதியில் அத்துமீறல்
/
'நம்பர் பிளேட்' இல்லாத லாரிகள் சித்தாமூர் பகுதியில் அத்துமீறல்
'நம்பர் பிளேட்' இல்லாத லாரிகள் சித்தாமூர் பகுதியில் அத்துமீறல்
'நம்பர் பிளேட்' இல்லாத லாரிகள் சித்தாமூர் பகுதியில் அத்துமீறல்
ADDED : பிப் 24, 2025 01:09 AM

சூணாம்பேடு,:சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், தொன்னாடு, நல்லாமூர், விளாங்காடு உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு கல் குவாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல் குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், கருங்கற்கள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
குவாரியில் இருந்து செல்லும் லாரிகள், அரசு விதிகளை மீறி அதிகபடியான பாரம் ஏற்றிச் செல்வது, பாரம் ஏற்றிச் செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடாமல் திறந்த நிலையில் செல்வதால், லாரிகளை பின்தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பெரும்பாலான 'டிப்பர்' லாரிகள், 'நம்பர் பிளேட்' இல்லாமல் வலம் வருகின்றன.
இதுகுறித்து லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் கூட்டம் நடத்தி, அதிக பாரம் ஏற்றிச் செல்லக்கூடாது, பின்புறத்தில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், விதிமீறல்களில் ஈடுபட்டு புகார்களில் இருந்து தப்பிக்க, நம்பர் பிளேட் இல்லாமல் தொடர்ந்து லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து, விதிமீறல்களில் ஈடுபடும் லாரிகள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் உலா வரும் லாரிகளின் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

