/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
/
வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வல்லிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
ADDED : மார் 05, 2025 07:52 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரம் பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. வல்லிபுரம், சுற்றுபுற பகுதியினர் பயிலும் இப்பள்ளியில், போதிய வகுப்பறை கட்டடம் இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமாறு, பெற்றோர் வலியுறுத்தினர். இதை பரிசீலித்த, செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, கூடுதல் வகுப்பறை கட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியில், 97.50 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.
அதைத்தொடர்ந்து, ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தற்போது கட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த திறப்புவிழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சிதம்பரம் வி.சி., - எம்.பி., திருமாவளவன் ஆகியோர், புதிய கட்டடத்தை திறந்தனர். செய்யூர் - வி.சி., எம்.எல்.ஏ., பாபு, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கல்வி துறையினர் பங்கேற்றனர்.