sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆதார் சேவை மையத்தில் இருக்கை வசதி அமையுமா?

/

ஆதார் சேவை மையத்தில் இருக்கை வசதி அமையுமா?

ஆதார் சேவை மையத்தில் இருக்கை வசதி அமையுமா?

ஆதார் சேவை மையத்தில் இருக்கை வசதி அமையுமா?


ADDED : மே 14, 2024 10:26 PM

Google News

ADDED : மே 14, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், பேரூராட்சி வளாகத்தில், தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ், ஆதார் நிரந்தர பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, ஆதார் அட்டை புதிதாக பதிவு செய்தல், புதுப்பித்தல், செல்போன் எண் மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல், முகவரி திருத்தம் செய்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன.

இதனால், அச்சிறுபாக்கம் பேரூராட்சி மட்டுமல்லாது, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும், 30-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இதில், பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள், கர்ப்பிணியர், வயதான முதியோர் என, பலதரப்பட்ட மக்களும், ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்கு, இருக்கை வசதிகள் அமைக்கப்படாததால், ஆதார் மையத்தின் வாசல் எதிரே, வெயிலில் வரிசையில் நிற்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, நிழற்கூரை அமைத்து, இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us