/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
/
தாம்பரம் - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
தாம்பரம் - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
தாம்பரம் - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : செப் 10, 2024 08:06 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் கிராமத்திற்கு, தாம்பரத்திலிருந்து தடம் எண் 55 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம், கொட்டமேடு வழியாக, செம்பாக்கம் வருகிறது.
இந்நிலையில், 4 கி.மீ., தொலைவில் உள்ள மானாமதி கிராமம் வரை, மேற்கண்ட பேருந்தை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மானாமதியை சுற்றியுள்ள மக்கள், செம்பாக்கம், கொட்டமேடு, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், 20 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டும்.
இதனால், அன்றாட தேவைகளுக்கு செல்லும் மக்கள், மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, தடம் எண் 55 பேருந்தை, மானாமதி வரை நீட்டித்தால், 20,000த்திற்கும் மேற்பட்டோர் பயனடைவர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும், மானாமதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

