/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக அமைக்கப்படுமா?
/
வி.ஏ.ஓ., அலுவலகம் புதிதாக அமைக்கப்படுமா?
ADDED : மே 22, 2024 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:அருங்குணம்- - புளியரணங்கோட்டை செல்லும் சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது, அந்தகட்டடம் பழமையானதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால், கிராம நிர்வாக அலுவலக ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமமாக உள்ளது.
எனவே, பழையகட்டடத்தை இடித்துஅப்புறப்படுத்தி,மீண்டும் அதே பகுதியில், புதிதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டடம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

