ADDED : மார் 02, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆடுதொட்டி பகுதியில் நேற்று புளியந்தோப்பு எஸ்.ஐ அப்துல் ரஷித் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சுமதி, 40, என்பவர் குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.
சுமதியிடம் இருந்து, ஒரு கிலோ மாவா, ஆறு கூல்லிப் பாக்கெட்கள் மற்றும் கத்தி ஒன்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.