/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
/
ஆதிபராசக்தி கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
ADDED : மார் 23, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லுாரியில், தனியார் நிறுவனங்கள் சார்பில் நேர்காணல் நடத்தி, 100 மாணவர்கள் தேர்வு செய்தனர். இப்பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில், நடந்தது.
இதில், கல்லுாரி தாளாளர் செந்தில்குமார் பங்கேற்று, மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். கல்லுாரி முதல்வர் இளங்கோவன், வேலைவாய்ப்பு ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், ரெனால்ட் நிஸான், டி.வி.எஸ்., சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். கம்ப்யூட்டர் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

