/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
108 ஆம்புலன்ஸ் பணிக்கு அழைப்பு
/
108 ஆம்புலன்ஸ் பணிக்கு அழைப்பு
ADDED : டிச 26, 2024 09:20 PM
செங்கல்பட்டு: 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நாளை காலை 10:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
* மருத்துவ உதவியாளர் அடிப்படை தகுதி:
பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., அல்லது விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியில், நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பம் என, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது, 19 - 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,990 ரூபாய். எழுத்து, நேர்முக தேர்வு, மனிதவளம் ஆகிய தேர்வுகள் உண்டு.
* ஓட்டுனருக்கான அடிப்படை தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் 'பேட்ஜ்' பெற்று, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது, 24 - 35க்குள் இருக்க வேண்டும். 162.5 செ.மீ.,க்கு குறையாத உயரம் இருக்க வேண்டும்.
* அனுபவம்:
வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, மூன்று ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,790 ரூபாய். எழுத்து, தொழில்நுட்பம், சாலை விதிகள் தேர்வுகள், மனிதவள நேர்காணல் உண்டு.
கண்பார்வை திறன் பரிசோதிக்கப்படும். இந்நியமனம் வாயிலாக, இலவச தாய் - சேய் நல வாகன ஓட்டுனர் பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும் விபரங்கள் அறிய, 044 2888 8060, 2888 8075, 2888 8077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

