sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அனுமதியின்றி பைக், கார் வாடகை 108 வாகனங்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி பைக், கார் வாடகை 108 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி பைக், கார் வாடகை 108 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி பைக், கார் வாடகை 108 வாகனங்கள் பறிமுதல்


ADDED : செப் 26, 2025 03:35 AM

Google News

ADDED : செப் 26, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில், தனியார் பல்கலை மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில், மென்பொருள் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.

இங்கு, வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கி படித்தும், வேலை பார்த்தும் வருகின்றனர்.

இவர்களை குறி வைத்து, போக்குவரத்து துறையின் உரிய அனுமதியின்றி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாடகைக்கு விடப்பட்டு வந்தன.

இதன் காரணமாக, பொத்தேரி பகுதியில் அடிக்கடி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவோருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று, போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் தலைமையில், பொத்தேரி பகுதியில் சோதனை நடத்தினர்.

இதில் 16 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 92 இருசக்கர வாகனங்கள், 16 கார்கள் என, மொத்தம் 108 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த வாகனங்களை, பொத்தேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us