sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 14 வீடுகள் அகற்றம்

/

 அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 14 வீடுகள் அகற்றம்

 அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 14 வீடுகள் அகற்றம்

 அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டியிருந்த 14 வீடுகள் அகற்றம்


ADDED : டிச 30, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: கீரப்பாக்கம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டிருந்த, 14 வீடுகளை, வருவாய்த் துறையினர் நேற்று இடித்து அகற்றினர்.

வண்டலுார் வட்டம், கீரப்பாக்கம் கிராமத்தில் கல்லாங்குத்து, கொத்துமலை ஆகிய வகைப்பாடு சார்ந்த புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, வருவாய் துறைக்கு கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று, வண்டலுார் தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர், போலீசார் உதவியுடன் மேற்கண்ட பகுதிக்கு வந்தனர்.

பின், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக அங்கிருந்த குடிசை, தளம் போட்ட 14 வீடுகள், 6 கடைகள், 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது மக்கள் திரண்டு வந்து, வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்தனர்.

இதனால், கீரப்பாக்கம் கிராமத்தில் சலசலப்பு ஏற்பட்டது.அடுத்தகட்டமாக, ஆக்கிரமிப்பில் உள்ள பல வீடுகளும் அகற்றப்பட உள்ளதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us