sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பையில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயம்

/

பையில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயம்

பையில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயம்

பையில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயம்


ADDED : ஜூன் 18, 2025 07:06 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 07:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை:குரோம்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் நிரஞ்சனாதேவி, 68. அஸ்தினாபுரத்தில் வசிக்கும் சகோதரர் குடும்பத்தினருடன் சேர்ந்து, நேற்று முன்தினம், அசோக் நகரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து, குரோம்பேட்டை நேரு நகர், இந்திரா காட்டன் மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தடம் எண்: 66ஏ என்ற பேருந்தில் ஏறி, அஸ்தினாபுரம் சென்றார்.

அங்கு இறங்கி, சகோதரரின் குடும்பத்தினரை அழைத்து வர, அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு, தான் வைத்திருந்த கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த, 14 சவரன் நகை மாயமானதை கண்டு, நிரஞ்சனா தேவி அதிர்ச்சியடைந்தார். நகை மாயமானது குறித்து, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us