/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்
/
போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்
போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்
போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்
ADDED : ஜூலை 03, 2025 01:41 AM

தாம்பரம்:தாம்பம் போலீஸ் கமிஷனரகத்தின் சார்பில், போக்குவரத்து போலீசார் பயன்பாட்டிற்கு, 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டு உள்ளன.
தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைத்தல் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில், நேற்று நடந்தது.
இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் பங்கேற்று, துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், ஜி.எஸ்.டி., - ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., ரேடியல் சாலைகள் மற்றும் பிற சாலைகளில் ரோந்து செல்ல பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு வாகனத்திலும் சைரன், ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு ரோந்து மற்றும் நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து மார்ஷல்கள், 8 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிவர். நெரிசல் நேரங்களில் அதிக கவனம் செலுத்துவர்.
நெரிசலை சரிசெய்தல், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி, சாலைகளில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை அகற்ற உதவுதல், பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு அருகில், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவை, இவர்களின் பணி.