sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு

/

செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு

செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு

செய்யூர் அரசு கலை கல்லுாரிக்கு 270 இடங்கள் ஒதுக்கீடு


ADDED : மே 09, 2025 02:14 AM

Google News

ADDED : மே 09, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில், 127 கிராமங்கள் உள்ளன. இதில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலேயே கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, செய்யூர் வட்டம் உள்ளது.மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு, 5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்ச்சியடைந்து, கல்லுாரிகளுக்குச் செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக செய்யூர் பகுதியில் அரசு கலைக் கல்லுாரி இல்லாததால், மாணவ - மாணவியர் அரசு மற்றும் தனியார் கல்லுாரிக்காக சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

மாணவ - மாணவியரின் நலன் கருதி, செய்யூர் பகுதியில் கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் 'செய்யூர், மானாமதுரை, ஆலந்துார் உள்ளிட்ட, தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலைக் கல்லுாரிகள் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், செய்யூரில் புதிதாக துவக்கப்பட உள்ள அரசு கலைக் கல்லுாரிக்கு, அடுத்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி கற்றலில் மூன்று, தமிழ் வழி கற்றலில் இரண்டு என, மொத்தம் ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us