/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு
ADDED : அக் 14, 2025 12:39 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 312 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, ஊராட்சிகளில் பொது பயன்பாட்டில் உள்ள நிலங்களை, ஊராட்சி நிர்வாகங்கள் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுராந்தகம் சுற்றியுள்ள கிராமங்களில் மின் அழுத்த குறைபாடு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 312 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஏழு பேருக்கு, இளநிலை உதவியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கான பணி நியமன ஆணையை, கலெக்டர் வழங்கினார்.