/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர் கூட்டத்தில் 35 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 35 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 31, 2025 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 35 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று, நடந்தது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிளில், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் துவங்க வங்கி கடன், பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 35 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.