/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர் கூட்டத்தில் 361 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 361 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 09, 2025 12:42 AM

செங்கல்பட்டுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 361 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று, நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்தின், உதவி ஆணையர் ராஜன்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி, மின் அழுத்த குறைபாடு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு, மகளிர் உரிமைத்தொகை, உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், ஐந்து பயனாளிகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை, கலெக்டர் வழங்கினார்.