/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 440 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 440 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 11, 2025 11:29 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில், 440 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தொழில் துவங்க வங்கி கடன் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 440 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உத்தரவிட்டார்.