sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர்வு கூட்டத்தில் 579 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர்வு கூட்டத்தில் 579 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 579 மனுக்கள் ஏற்பு

குறைதீர்வு கூட்டத்தில் 579 மனுக்கள் ஏற்பு


ADDED : மார் 25, 2025 07:41 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், உதவி கமிஷனர் கலால் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, மின்சார வசதி, வேலைவாய்ப்பு, தொழில் துவங்க வங்கி கடன், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 579 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், இரண்டு நபர்களுக்கு காதொலி கருவி, தையல் இயந்திரம், 'பிரெய்லி வாட்ச்' தலா ஒருவருக்கும், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற நான்கு பேருக்கு, தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணையை, கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us