/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,833 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,833 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,833 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6,833 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 02:08 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 6,833 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், ஆலந்துார், ஆகிய இடங்களில், நீதிமன்றங்கள் உள்ளன.
இந்த நீதிமன்றங்களில், தேங்கி உள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாற்றுமுறை தீர்வு மைய வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தலைமையில், நேற்று, நடந்தது. இதில், முதன்மை சார்பு நீதிபதி பாஸ்கரன், கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில், வழக்குகளுக்கு, சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்டங்களில் அனைத்து நீதிமன்றங்களில் உள்ள, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வழக்குள் என, 9,178 வழக்குகள் பரிசிலீனைக்கு எடுக்கப்பட்டன. இதில், 6,833 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது.