sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

/

மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி


ADDED : அக் 02, 2024 09:23 PM

Google News

ADDED : அக் 02, 2024 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின், 66. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, புத்துார் கிராமத்தில் உள்ள தீனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வயலில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பிற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், இரவு 12:30 மணிக்கு, செபாஸ்டின் மகன் உகம், 20, வயலுக்கு சென்று பார்த்தார்.

அப்போது, விவசாய நிலத்தின் மீது சென்ற மின் ஒயர் அறுந்து, செபாஸ்டின் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து செபாஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரிந்தது.

இதுகுறித்து, செய்யூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மின் இணைப்பை துண்டித்து, செபாஸ்டின் உடலை மீட்டனர்.

பின், வழக்குப்பதிந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரிழப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us