/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென மயங்கி விழுந்து பலி
/
விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென மயங்கி விழுந்து பலி
விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென மயங்கி விழுந்து பலி
விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென மயங்கி விழுந்து பலி
ADDED : ஏப் 09, 2025 10:16 PM
திருப்போரூர்:சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 56. இவருக்கு, கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதியில் நிலம் உள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி, 59, என்பவர், கார்த்திகேயனின் இடத்தை வாங்க முடிவு செய்து, அவரை அணுகியுள்ளார்.
பின், இந்த இடத்தை ஆனந்திக்கு விற்க, 49 லட்சம் ரூபாய் விலை பேசி முடித்து,
முன்பணமாக 26 லட்சம் ரூபாய் கார்த்திகேயன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், கார்த்திகேயன் அந்த நிலத்தை எழுதிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஆனந்தி கடந்தாண்டு தாழம்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் கார்த்திகேயனுக்கு போலீசார் 'சம்மன்' கொடுத்து, விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கார்த்திகேயன் மயங்கி கிழே விழுந்ததாக தெரிகிறது.
உடனே, உறவினர்கள் அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில், அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து கார்த்திகேயன் குடும்பத்தினர், அபிராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

