sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அவசியம்

/

 செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அவசியம்

 செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அவசியம்

 செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அவசியம்


ADDED : டிச 31, 2025 03:37 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், பஜார் பகுதியில் அதிக அளவில் பல்வேறு கடைகள் உள்ளன.

தேவராஜபுரம், சால்ட் காலனி, மேற்கு செய்யூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, செய்யூர் பஜார் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தினமும் ஏராளமானோர் பஜார் பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், இங்கு குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால், செய்யூர் பஜாருக்கு வரும் மக்கள், கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் பஜாரில் உள்ள பழைய காவல் நிலைய கட்டடம் உள்ள இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us