sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஈச்சர் லாரி மோதி விபத்து ஆட்டோவில் சென்ற பெண் பலி

/

ஈச்சர் லாரி மோதி விபத்து ஆட்டோவில் சென்ற பெண் பலி

ஈச்சர் லாரி மோதி விபத்து ஆட்டோவில் சென்ற பெண் பலி

ஈச்சர் லாரி மோதி விபத்து ஆட்டோவில் சென்ற பெண் பலி


ADDED : செப் 20, 2024 08:05 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 40. ஆட்டோ ஓட்டுனர். இவர், மனைவி கிருஷ்ணவேணி, 34, மகள்கள் நவ்யாஸ்ரீ, 16, சோபியா, 14, ஆகியோருடன், நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆட்டோவில் சென்றனர்.

அப்போது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் தனியார் உணவகம் அருகே ஆட்டோ சென்றபோது, திருச்சிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, எதிர்பாராத விதமாக ஆட்டோவின் பின்னால் மோதியது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்த நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, கிருஷ்ணவேணி, 34, உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த படாளம் போலீசார், விபத்தை ஏற்படுத்தி, தலைமறைவான ஈச்சர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us