/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுவால் உடல்நிலை பாதித்த வாலிபர் பலி
/
மதுவால் உடல்நிலை பாதித்த வாலிபர் பலி
ADDED : ஜன 19, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த எடர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன், 25. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தொடர்ச்சியாக மது அருந்தி வந்துள்ளார்.
இதனால், உடல்நிலை சரியில்லாமல், கடந்த 11ம் தேதி, அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்று நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் இறந்தார். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.