/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதடைந்த மின்மாற்றி கம்பங்களால் மாநில நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
பழுதடைந்த மின்மாற்றி கம்பங்களால் மாநில நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
பழுதடைந்த மின்மாற்றி கம்பங்களால் மாநில நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
பழுதடைந்த மின்மாற்றி கம்பங்களால் மாநில நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : மே 22, 2025 01:35 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே மணப்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில், சூணாம்பேடு- - தொழுப்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரத்தில், விநாயகர் கோவில் எதிரே, உயரழுத்த மின்மாற்றி உள்ளது.
இதன் வாயிலாக, வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மின்மாற்றியை தாங்கிப்பிடிக்கும் மின் கம்பங்களில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு பழுதடைந்து உள்ளது.
பலத்த காற்று வீசினால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மின்மாற்றி சாய்ந்து, விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்தும் நிலையிலுள்ள மின்மாற்றியின் மின் கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.