/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆலோசனை
/
திருப்போரூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆலோசனை
திருப்போரூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆலோசனை
திருப்போரூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆலோசனை
ADDED : பிப் 26, 2024 12:31 AM
திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில், பழமையான திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அக்னி வசந்த விழாவில், மகாபாரத சொற்பொழிவு, நாடகம், துரியோதனன் படுகளம், தீமிதி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த இரண்டு ஆண்டுகளாக கோவில் விமான கோபுரம், மண்டபம் உள்ளிட்டவை திருப்பணி மேற்கொண்டு, பணி நிறைவுபெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில், கோவில் நிர்வாகத்தினர், உற்சவதாரர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். வரும் ஜூன் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

