/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கைது
/
மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கைது
ADDED : பிப் 04, 2026 06:09 AM
செங்கல்பட்டு: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், வருவாய்த் துறையில் கிராம உதவியாளருக்கு உள்ளது போல், சிறப்பு 'பென்ஷன்' 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500 ரூபாயும், சமையலர், உதவியாளருக்கு, அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் வழங்க வேண்டும்.
ஆனால், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, அங்கன்வாடி பணியாளர்கள் 300 பேர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து, பின் விடுவித்தனர்.

