/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழில் பழகுநர் முகாம் செங்கையில் இன்று நடக்கிறது
/
தொழில் பழகுநர் முகாம் செங்கையில் இன்று நடக்கிறது
ADDED : ஜூலை 13, 2025 10:29 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் முகாம், இன்று நடக்கிறது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் முகாம், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று, தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்வேறு தொழிற்பிரிவைச் சார்ந்தவர்கள், தொழில் பழகுநர் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் என்.ஏ.சி., சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
இந்த முகாமில், மாணவ - மாணவியர் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலும் அல்லது dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 63790 90205, 2742 6554 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.