/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
/
மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
ADDED : செப் 26, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:சிட்லப்பாக்கம், வைத்தியலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ், 30. தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் காரில் வேலைக்கு சென்ற யோகேஷ், இரவு 11:30 மணிக்கு, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தில் இருந்து குதித்து, படுகாயமடைந்த நிலையில் கிடந்தார். அவ்வழியாக சென்றோர், அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

