/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 சவரன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது
/
3 சவரன் திருடிய ஆட்டோ டிரைவர் கைது
ADDED : நவ 09, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்: ஐ.டி., பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.
துரைப்பாக்கம், வி.பி.ஜி., அவென்யூவில் வாடகை வீட்டில் வசிப்பவர் சிவகவுரிசங்கர், 30. ஐ.டி., ஊழியர். நேற்று முன்தினம் மாலை, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், சிவ கவுரிசங்கரிடம் கூறினார்.
அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.
தகவலின் பேரில், துரைப்பாக்கம் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜேக்கப், 28, என்பவரை கைது செய்தனர்.

