ADDED : மே 17, 2025 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சி, குன்றுக்காடு பகுதியில் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் கோவிலுக்கு வழிபட சென்றனர்.
அப்போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. அங்கிருந்த வெள்ளிமாலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் திருட்டு போயின.
இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.