/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பேருந்து மோதி பைக் மெக்கானிக் பலி
/
அரசு பேருந்து மோதி பைக் மெக்கானிக் பலி
ADDED : ஏப் 23, 2025 02:08 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், 'ஸ்கூட்டர்' மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 50; 'பைக்' மெக்கானிக். இவர் நேற்று இரவு, 'ஹோண்டா ஐ ஸ்மார்ட்' ஸ்கூட்டரில், முதுகரை பகுதியில் இருந்து, மதுராந்தகம் நோக்கி வந்தார். அதே நேரம், கிளாம்பாக்கத்திலிருந்து மதுராந்தகம் வழியாக, முகையூர் நோக்கி, தடம் எண்: '81எம்' அரசு பேருந்து வந்தது.
மதுராந்தகம் அருகே குருகுலம் பகுதியில், எதிர்பாராத விதமாக பழனியின் ஸ்கூட்டர் மீது, அரசு பேருந்து மோதியது. இதில், பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், பழனியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

