sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்ணிடம் சில்மிஷம் பைக் டாக்சி ஓட்டுநர் கைது

/

பெண்ணிடம் சில்மிஷம் பைக் டாக்சி ஓட்டுநர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் பைக் டாக்சி ஓட்டுநர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் பைக் டாக்சி ஓட்டுநர் கைது


ADDED : அக் 27, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானகரம்: 'ரேபிடோ' பைக் டாக்சியில் பயணித்த பெண்ணிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயலில் வசிக்கும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண். பள்ளிக்கரணையில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு செல்ல, நேற்று முன்தினம் இரவு 'ரேபிடோ' பைக் டாக்சி புக் செய்துள்ளார்.

அங்கு வந்த வாலிபர்,தன் பைக்கில் அப்பெண்ணை பள்ளிக்கரணை அழைத்து சென்றார். அங்கு சென்ற பின், சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் மதுரவாயலுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

காத்திருந்த பைக் ஓட்டுநர், அங்கிருந்து மீண்டும் மதுரவாயிலுக்கு புறப்பட்டார்.

வரும் வழியில், போரூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அப்பெண், தன் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

இதையடுத்து, அந்த நபரிடம் நைசாக பேசி, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். அங்கு காத்திருந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, வானகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரித்த போலீசார், 'ரேபிடோ' பைக் டாக்சி ஓட்டுநரான அடையாறைச் சேர்ந்த சிவகுமார், 22, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us